குரூப்–1 தேர்வில் 74 பணியிடங்களுக்கு 222000 பேர் விண்ணப்பம் : அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் தகவல்.
TNPSC Group I தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது:
குரூப்–1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது. 74 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 771 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–2 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
![]() |
| tnpsc coaching center in vellore |
TNPSC Group 1 - 74 Post :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பதவிகளுக்கு 74 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொறுப்பை தமிழக அரசு கொடுத்தது. அதன்படி முறையாக அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து இருந்தோம். விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 771 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் என்ஜினீயரிங் படித்தவர்கள்.இவர்கள் அனைவரும் முதலில் முதல் நிலை தேர்வு எழுதவேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் அதிகாரிகளாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள். எவ்வளவு விரைவாக முடிவை அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவிக்க உள்ளோம்.
முடிவு வெளியீடு:
நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஜூலை 17–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் விவரம் ஆகியவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு:
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு வருகிற 24–ந் தேதி முதல் செப்டம்பர் 1–ந் தேதி வரை நடக்க உள்ளது. 1,136 பணியிடங்களுக்கு 2ஆயிரத்து 265 பேர் அழைக்கப்பட உள்ளனர். இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment